குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

 

குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 2 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் கடந்த 10ஆம் தேதி திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் சாலையில் நடந்துசென்ற நபரிடம், பட்டாக் கத்தியைக்காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றார். இதுகுறித்து, புகாரின் பேரில், திண்டுக்கல் மாநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, முபாரக் அலியை கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா பரிந்துரையின் பேரில், முபாரக் அலியை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

இதேபோல், கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், இவர் கடந்த மாதம், பழனி சந்தன்செட்டிவலசு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கீரனூர் காவல் நிலைய போலீசார், தங்கராஜை கைதுசெய்து வேடசந்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் எஸ்.பி. ரவளி பிரியா பரிந்துரையின் பேரில், தங்கராஜை குண்டர் தடுப்புக்காவலில் வைக்க ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தங்கராஜ் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.