பண மோசடி வழக்கு – இந்திய வம்சாவளியினர் 2 பேருக்கு இங்கிலாந்தில் சிறைத் தண்டனை

 

பண மோசடி வழக்கு – இந்திய வம்சாவளியினர் 2 பேருக்கு இங்கிலாந்தில் சிறைத் தண்டனை

லண்டன்: இங்கிலாந்தில் பண மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியினர் இருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பண மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியினர் இருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. விஜய குமார் கிருஷ்ணசாமி (32) மற்றும் சந்திரசேகர் நல்லயன் (44) ஆகிய இருவர் உலகம் முழுவதும் பணமோசடி மற்றும் சில குற்றங்களில் ஈடுபட்டனர். அதாவது கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்றனர். இந்த வழக்கில் ஸ்காட்லாந்து யார்டின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வந்தனர்.

இவர்கள் சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு உலகில் பணமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 1.6 மில்லியன் பவுண்டுகள் பணத்தை மோசடி செய்ய முயன்றுள்ளனர். இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் விஜயகுமார் கிருஷ்ணசாமிக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் மற்றும் சந்திரசேகர் நல்லயனுக்கு ஏழு ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.