இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் மாயம்

 

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் மாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் மாயமாகியுள்ளனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் காணாமல் போயுள்ளனர். கடந்த இரண்டு மணி நேரமாக அந்த அதிகாரிகளை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.ஐ.எஸ்.எஃப் ஓட்டுநரும், தூதரகத்தின் மற்றொரு அதிகாரியும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

பாகிஸ்தானின் இடை-சேவை புலனாய்வு (ஐ.எஸ்.ஐ) அடிக்கடி இந்திய அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளை வேவு பார்ப்பதாக கூறப்படுகிறது. உளவு குற்றச்சாட்டில் இரண்டு பாகிஸ்தான் தூதர்களை டெல்லியில் இருந்து இந்திய அரசு  வெளியேற்றிய 10 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் இரு தூதரக அதிகாரிகள் மாயமாகியிருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.