விளையாடிய சிறுமியை களவாடிய வாலிபர்கள் -20 ஆண்டுகள் சிறையிலடைக்க உத்தரவு

 

விளையாடிய சிறுமியை களவாடிய வாலிபர்கள் -20 ஆண்டுகள் சிறையிலடைக்க உத்தரவு


ஒரு வீட்டு வாசலில் விளையாடிய 3 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த இரு வாலிபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது .

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் செவ்ரியில் உள்ள ஆர்.ஏ.கே.மார்க் பகுதியில் இரு வாலிபர்கள் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்தி கொண்டு போனார்கள் .அதன் பின்னர் அந்த சிறுமியை ஒருவர் பாலியல் கொடுமை செய்யும்போது இன்னொருவர் யாரும் வாராமல் பார்த்து கொண்டிருந்தார் .அப்போது அந்த சிறுமியின் உறவினர் வந்து விடவே அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள் அதனால் அந்த சிறுமியிடம் அவர்கள் பெற்றோர் விசாரித்தபோது அவர் நடந்த விவரத்தினை கூறினார் .இந்த சம்பவம் 2018ம் ஆண்டில் நடைப்பெற்றது .
அதன் பிறகு அவரின் பெற்றோர் அவர்கள் மீது போலீசில் புகாராளித்தார்கள் .போலீசார் அந்த இரு வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கும் நடைபெற்றது .அப்போது நடந்தத விசாரணையில் அந்த வாலிபர்கள் தங்கள் மீது வேண்டுமென்றே புகார் கூறுவதாக கூறினார்கள் ,மேலும் அவர்களோடு தங்களின் குடும்பத்திற்கும் பழைய பகை இருப்பதாகவும் அதனால் தங்கள் மீது புகார் கூறுவதாக க்கூறினார்கள் .அனால் கோர்ட் அவர்களின் கூற்றினை ஏற்காமல், அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலும் தீர்ப்பளித்தது .அதனடிப்படையில் அந்த இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது .

விளையாடிய சிறுமியை களவாடிய வாலிபர்கள் -20 ஆண்டுகள் சிறையிலடைக்க உத்தரவு