குடியாத்தம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது!

 

குடியாத்தம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது!

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த 2 பேர் குடியாத்தத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருக்கிறது மேல்ஆழத்தூர் கிராமம். அப்பகுதியில் கோவிந்தசாமி, வெங்கடேசன் ஆகிய 2 பேர் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். அப்பகுதி மக்கள் எல்லாரும் அவர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அவர்கள் இரண்டு பேரும் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பதாக சிறப்பு மருத்துவக் குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

குடியாத்தம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது!

அந்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கோவிந்தசாமி மற்றும் வெங்கடேசன் மருத்துவர்கள் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை அதிரடியாக கைது செய்த சிறப்பு மருத்துவக் குழுவினர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.