ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்பாமல் ரூ. 78 லட்சத்தை ஆட்டையை போட்ட இருவர் கைது!

 

ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்பாமல் ரூ. 78 லட்சத்தை ஆட்டையை போட்ட இருவர் கைது!

புதுவை ரைட்டர் சர்வீஸ் (Writer Services Pvt) என்ற நிறுவனம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்திருந்தது. இதில் விழுப்புரம் தென்நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த காளிங்கன் (28), பிரசாந்த் (28) என்ற இருவரும் இந்த பணியை செய்து வந்தனர்.

ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்பாமல் ரூ. 78 லட்சத்தை ஆட்டையை போட்ட இருவர் கைது!
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக காளிங்கன் மற்றும் பிரசாந்த் இருவரும் பணிக்கு வரவில்லை. அவர்களின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. அதன்பிறகு தான் அவர்கள் ஏடிஎம் மையத்தில் நிரப்ப எடுத்து சென்ற 78 லட்சத்து 21 ஆயிரம் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.

ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்பாமல் ரூ. 78 லட்சத்தை ஆட்டையை போட்ட இருவர் கைது!
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் இதே போல கடந்த 6 மாதமாக கையாடல் செய்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.