‘கடலில் மூழ்கி 2 பேர் பலி’ திதி கொடுக்கச் சென்றதால் நேர்ந்த சோகம்!

 

‘கடலில் மூழ்கி 2 பேர் பலி’ திதி கொடுக்கச் சென்றதால் நேர்ந்த சோகம்!

ராமநாதபுரம் அருகே திதி கொடுக்கச் சென்ற 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூர் கடற்கரை பகுதியில் திதி கொடுக்க ராஜகுரு, கார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சென்றுள்ளனர். சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு 3 பேரும் கடலில் இறங்கி திதி கொடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, கடலில் எழுந்த ராட்சத அலை மூவரையும் இழுத்துச் சென்ற நிலையில் ராஜகுரு மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ராஜ்குமார் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

‘கடலில் மூழ்கி 2 பேர் பலி’ திதி கொடுக்கச் சென்றதால் நேர்ந்த சோகம்!

தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜ்குமாரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், உயிரிழந்த இருவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கடல் சீற்றத்துடன் இருந்த நிலையில், இவர்கள் திதி கொடுக்க சென்றதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.