கும்பகோணத்தில் கொரோனா பாதிப்பால் 2 மருத்துவர்கள் பலி!

 

கும்பகோணத்தில் கொரோனா பாதிப்பால் 2 மருத்துவர்கள் பலி!

தஞ்சை

கும்பகோணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 மருத்துவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மருத்துவர் அப்துல் அஜீம். இ.என்.டி மருத்துவரான இவர் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அப்துல் அஜீமுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கும்பகோணத்தில் கொரோனா பாதிப்பால் 2 மருத்துவர்கள் பலி!

மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால், அங்கேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அப்துல் அஜீம் உயிரிழந்தார். இதேபோல், கும்பகோணத்தில் நீரிவு நோய் மருத்துவமன நடத்தி வரும் மருத்துவர் சித்தார்த்தன் (52) என்பவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதனால், தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் அடுத்தடுத்து 2 மருத்துவரகள் உயிரிழந்த சம்பவம் கும்பகோணம் பகுதி மக்களை அச்சத்தில் உறைய செய்துள்ளது.