கோவையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 மான்கள் பலி… வனத்துறை விசாரணை…

 

கோவையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 மான்கள் பலி… வனத்துறை விசாரணை…

கோவை

மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற இருவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குருந்தமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் நெல்லிமலை வனக்காப்பாளர் விஜயகுமார் தலைமையில் வனத்துறையினர் குருந்தமலை – தேக்கம்பட்டி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சாக்குமூட்டையை வைத்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுக்க முயன்றனர்.

கோவையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 மான்கள் பலி… வனத்துறை விசாரணை…

ஆனால் அந்த நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றனர். இதனை அடுத்து, அவர்களை வனத்துறையினர் விரட்டிச்சென்றபோது, சாக்குமூட்டையை வீசி விட்டு அவர்கள் அதிவேகமாக தப்பிச்சென்றனர். பின்னர், சாக்குமூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது, அதில் உயிரிழந்த நிலையில் 2 மான்கள் குண்டடிப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவற்றை வனத்துறை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள், மான்களை வேட்டையாடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்