அழுகி துர்நாற்றம் வீசிய அண்ணன், தங்கை சடலங்கள்.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

 

அழுகி துர்நாற்றம் வீசிய அண்ணன், தங்கை சடலங்கள்.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5 வது பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அப்பகுதி மக்கள், அந்த வீட்டில் இருந்தவர்களின் உடல் அழுகி துர்நாற்றம் வீசுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு வந்த போலீசார், வீட்டில் சோதனை செய்தனர்.

அழுகி துர்நாற்றம் வீசிய அண்ணன், தங்கை சடலங்கள்.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

அங்கு படுக்கையறையில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. அதற்கு பக்கத்து அறையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதனையடுத்து அந்த இரண்டு சடலங்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கோண்ட சோதனையில் அந்த வீட்டில் ஒரு சின்னத்திரை அடையாள அட்டையுடன் பல மாத்திரைகள் இருந்துள்ளது.

அழுகி துர்நாற்றம் வீசிய அண்ணன், தங்கை சடலங்கள்.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

அதன் பின்னர் அந்த இரண்டு பேர் குறித்து போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அண்ணன், தங்கை என்றும் அவர்கள் இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளாமல் 7 ஆண்டுகளாக இந்த வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.