பொங்கலுக்கு செய்த பலகாரத்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு!

 

பொங்கலுக்கு செய்த பலகாரத்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு!

திருவண்ணாமலையில் பொங்கலுக்கு செய்த பலகாரத்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கலுக்கு செய்த பலகாரத்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 3 நாட்களாக வெகுவிமர்சையாக நடைபெற்றது. தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என 3 நாட்கள் நடந்த விழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து, பலகாரம் செய்து உறவினர்களுடன் இனிமையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பொங்கலுக்கு செய்த பலகாரத்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்நிலையில் திருவண்ணாமலை செங்கம் அருகே பொங்கலுக்கு செய்த பலகாரத்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. கடந்த 14 ஆம் தேதி செய்த வடை, அதிரசம் உள்ளிட்ட பண்டங்களை உட்கொண்ட யாழினி (6), ஹரி(4) ஆகிய இரண்டு குழந்தைகளும் பலியாகியுள்ளன. நாள்பட்ட உணவை சாப்பிட்டதால், குழந்தைகள் உயிரிழந்ததா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறப்புக்கான காரணம் விரைவில் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.