+2 மாணவிக்கு வன்கொடுமை; எஸ்.எஸ்.எல்.சி மாணவி கடத்தல்… இளைஞர் போக்சோவில் கைது!

 

+2 மாணவிக்கு வன்கொடுமை; எஸ்.எஸ்.எல்.சி மாணவி கடத்தல்…  இளைஞர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, 10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தயார் வெளியூரில் பணிபுரியும் நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையுன் வசித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி மார்த்தாண்டம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்த அபி(19) என்பவரை காதலித்து வந்துள்ளார். அப்போது, மாணவியை திருணம் செய்து கொள்வதாக கூறி அபி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அபி தன்னை திருமணம் செய்துகொள்வார் என மாணவி நம்பிக்கையுடன் இருந்துள்ளார்.

+2 மாணவிக்கு வன்கொடுமை; எஸ்.எஸ்.எல்.சி மாணவி கடத்தல்…  இளைஞர் போக்சோவில் கைது!

இந்த நிலையில், அபி அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் வீட்டை விட்டு ஓடியதாக மாணவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும், அபியுடன் ஓடிய 10ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோரும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து, இரு புகார்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கடத்திய 10ஆம் வகுப்பு மாணவியுடன் அபி தனது வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வரவே விரைந்து சென்று அபியை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். தொடர்ந்து, இரு மாணவிகளையும் மருத்துவ பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இரு மாணவிகளிடம் இளைஞர் காதலிப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.