மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு : தஞ்சையில் மீண்டும் துயரம்!

 

மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு : தஞ்சையில் மீண்டும் துயரம்!

தஞ்சை அருகே வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கல்யாண ஓடை மறவக்காடு பகுதியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சகோதரர்கள் தினேஷ்(12) , கௌதம்(10) தவறுதலாக மின்கம்பியை மிதித்துள்ளனர். இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்ட போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு : தஞ்சையில் மீண்டும் துயரம்!

வரகூரில் நேற்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சையை நோக்கிச் சென்ற பேருந்து, மின்கம்பி மீது உரசி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சற்றும் எதிர்பாராத இந்த மின் விபத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.