சிவகங்கை அருகே கோயில் குளத்தில் மூழ்கி, 2 சிறுவர்கள் பலி!

 

சிவகங்கை அருகே கோயில் குளத்தில் மூழ்கி, 2 சிறுவர்கள் பலி!

சிவகங்கை

சிவகங்கை அருகே கோயில் குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த தாயமங்கலம் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் நடந்து வரும் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி, பழமலை பகுதியை சேர்ந்த குறவர் சமூக மக்கள் கடை அமைத்து, பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே கோயில் குளத்தில் மூழ்கி, 2 சிறுவர்கள் பலி!

இந்த நிலையில், நேற்று மாலை குறவர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள், அங்குள்ள கோவில் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, சிங்காரவேலன் என்பவரது மகன் வெற்றிவேல் (5) மற்றும் சந்திரசேகர் என்பவரது மகன் குணசேகர்(6) ஆகியோர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். மற்ற சிறுவர்களின் அலறல் கேட்டு அருகில் இருந்தவர்கள் குளத்தில் குதித்து தேடினர்.

சுமார் 1 நேர தேடலுக்கு பின் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.