கோவை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!

 

கோவை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!

கோவை

கோவை அருகே குளத்தில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(17) மற்றும் விஷ்ணு பிரசாத் (15). நண்பர்களான இவர்கள் நேற்று பிற்பகல் நாகராஜபுரம் அடுத்துள்ள நரசம்பதி குளத்திற்கு குளிக்கச் சென்றனர். குளத்தில் குளித்து கொண்டிருந்த எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதனை கண்டு, அங்கிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

கோவை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடலுக்கு பின் அவர்கள், சந்தோஷ் மற்றும் விஷ்ணு பிரசாதை சடலமாக மீட்டனர். பின்னர், வடவள்ளி போலீசார் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, குளம் அமைந்துள்ள பகுதி குறித்த குழப்பம் காரணமாக உடலை எடுப்பது குறித்து செல்வபுரம் மற்றும் வடவள்ளி காவல் நிலைய போலீசாருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால், சடலங்களை எடுப்பதில் சுமார் 2 மணிநேரம் கால தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.