பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி!

 

பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி!

திருமயம் அருகே மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சந்தனவிடுதி கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெய்த கனமழையால் அந்த பள்ளம் மழை நீரில் நிரம்பிய நிலையில், விமல்(10) மற்றும் அன்பு(8) என்னும் 2 சிறுவர்களும் அங்கு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் பள்ளத்தில் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அங்கு பள்ளம் தோண்டியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.