அன்னூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – பேக்கரி ஊழியர்கள் 2 பேர் கைது!

 

அன்னூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – பேக்கரி ஊழியர்கள் 2 பேர் கைது!

கோவை

கோவை மாவட்டம் அன்னூரில் பேக்கரி ஊழியரின் மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த, 2 ஊழியர்களை போலீசார் கைதுசெய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் தனது 20 வயது மனைவியுடன், கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பசூர் பட்டறை பகுதியில் தங்கி, பாலக்காட்டை சேர்ந்த மொய்தீன் குட்டி என்பவரது பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், அந்த கடையில் பாலக்காட்டை சேர்ந்த சமீர் (25), ஷிஹாபுதீன் (27) ஆகியோரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பேக்கரி மூடப்பட்டு உள்ளதால் தம்பதியினர் வருமானம் இன்றி தவித்து வந்தனர். இதனால், அவ்வப்போது கிடைக்கும் வேலையை இருவரும் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 6ஆம் தேதி காலை பால்ராஜ் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் மனைவி தனியாக இருப்பதை அறிந்த பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டி உள்ளிட்ட 3 பேரும், அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அன்னூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – பேக்கரி ஊழியர்கள் 2 பேர் கைது!

மேலும், இதுகுறித்து கணவரிடமோ அல்லது, வேறு யாரிடமோ? கூறினால், இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் கணவரிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்த அந்த பெண், நேற்று என்ன ஆனாலும் பரவாயில்லை என துணிந்து நடந்தவற்றை கணவரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பால்ராஜ், உடனடியாக துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு சமீர் மற்றும் ஷிஹாபுதீனை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பேக்கரி ஊழியரின் மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அன்னூர் பகுதயில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.