காவலர்களை மிரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் அதிரடி கைது!

 

காவலர்களை மிரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் அதிரடி கைது!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 4 மாத காலமாக கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த போது, மீண்டும் தலைதூக்கிய கள்ளசாராயம் மதுக்கடைகள் திறந்த பிறகும் தொடர்ந்து வருகிறது. சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சும் பல கும்பல்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளச்சாராய கும்பலை கைது செய்ய சென்ற போலீசாரை மிரட்ட துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவலர்களை மிரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் அதிரடி கைது!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சிவநாதபுரம் என்னும் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த இடத்துக்கு போலீசார் வருவதை அறிந்த அன்பு மற்றும் விஜி ஆகியோர் போலீசாரை மிரட்ட நாட்டுத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

காவலர்களை மிரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் அதிரடி கைது!

இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்த போலீசார், அவர்களை கைது செய்துள்ளனர். அங்கிருந்த மற்றவர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நாட்டுத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.