கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை- மருத்துவர் உள்பட இருவர் கைது!

 

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை- மருத்துவர் உள்பட இருவர் கைது!

சென்னை

சென்னை கிண்டியில் கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற மருத்துவர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை கிண்டி பகுதியில், கொரோனா சிகிச்சைக்கு அவசியமான ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை- மருத்துவர் உள்பட இருவர் கைது!

அதன் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் மருத்துவர் ராமசுந்தர் மற்றும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஆகியோர் முறைகேடாக கள்ளச்சந்தையில் மருந்தை விற்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 22 குப்பி ரெம்டெசிவிர் மருந்தை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அதனை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.