கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

 

கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சின்னப்பன்(65) என்பவரை ரகசிய தகவலின் பேரில் கைதுசெய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து 5.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சின்னப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்று, திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்போர்ட் நகர் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த மணிகண்டன் என்பவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது – 7 கிலோ கஞ்சா பறிமுதல்