செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது – தனிப்படை போலீஸ் அதிரடி!

 

செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது – தனிப்படை போலீஸ் அதிரடி!

மதுரை:

அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தி முனையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைதுசெய்தனர்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் செல்வதாக போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.

செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது – தனிப்படை போலீஸ் அதிரடி!

இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அலங்காநல்லூர் ஊமச்சிகுளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெகதீஸ்வரன் என்ற இளைஞரை, மர்மநபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, 2 செல்போன்கள் மற்றும் வாகனத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அவ்வழியே சென்றவர்கள் தெரிவித்த புகாரின் பேரில், போலீசார் உடனடியாக வழிப்பறி கும்பலை சேர்ந்த 2 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது – தனிப்படை போலீஸ் அதிரடி!

விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த சரவண பாண்டி மற்றும் விஷ்ணுகுமார் என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டு பணம், மற்றும் செல்போன்களை கொள்ளையடிப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து,
2 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.