சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த 2 பேர் போக்சோவில் கைது!

 

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த 2 பேர் போக்சோவில் கைது!

சென்னை

எண்ணூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 6 ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து மாயமாகினார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில, இது குறித்து எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த 2 பேர் போக்சோவில் கைது!

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், தகவலின் பேரில் அத்திப்பட்டு பாலம் பகுதியில் நின்றிருந்த சிறுமியை மீட்ட போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அதே பகுதியை சேர்ந்த அழகுராஜ் (33) மற்றும் அஜித் (24) அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்துவிட்டு, தப்பியோடியது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த இருவரையும் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.