தூத்துக்குடியில் உரிய ஆவணமில்லாத ரூ.2.77 லட்சம் பறிமுதல்!

 

தூத்துக்குடியில் உரிய ஆவணமில்லாத ரூ.2.77 லட்சம் பறிமுதல்!

தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு உரிய ஆவணமின்றி கேரள வியாபாரிகள் எடுத்து வந்த 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று தூத்துக்குடி கடற்கரை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடியில் உரிய ஆவணமில்லாத ரூ.2.77 லட்சம் பறிமுதல்!

அப்போது, கடற்கரை பகுதிக்கு 2 கார்களில் வந்த நபர்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 2 கார்களிலும் சுமார் 2 லட்சத்து 77 ஆயிரம் ருபாய் பணம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் முகேஷ் மற்றும் வினோத் என்பதும், மீன் வாங்குவதற்காக இருவரும் பணம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், பின்னர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.