தனியார் தோட்டத்தில் பதுக்கிவைத்த 2.5 டன் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

 

தனியார் தோட்டத்தில் பதுக்கிவைத்த 2.5 டன் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

நெல்லை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே தனியார் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2.5 டன் குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த வன்னிகோனேந்தல் பகுதியில் தேவர்குளம் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் மறித்து, போலீசார் சோதனையிட்டனர். அதில், வாகனத்தில் சுமார் 300 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது.

தனியார் தோட்டத்தில் பதுக்கிவைத்த 2.5 டன் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

இதனை அடுத்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநர் வசந்தகுமாரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து, அவர் அளித்த தகவலின் அடிப்படையில் வன்னிகோந்தல் பகுதியை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2.5 டன் குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

குட்கா பறிமுதல் குறித்து, தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர் வசந்தகுமாரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.