கம்பத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.2.30 லட்சம் பறிமுதல்!

 

கம்பத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.2.30 லட்சம் பறிமுதல்!

தேனி

கம்பம் அருகே கேரளாவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரளாவில் இருந்து வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கம்பத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.2.30 லட்சம் பறிமுதல்!

அதில், காரில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த வாசுதேவ் என்பது தெரியவந்தது.

எனினும், எடுத்துச்சென்ற பணத்திற்கான ஆவணம் அவரிடம் இலலாதது தெரியவந்ததால், அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான பணம் உத்தமபாளையம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.