‘2.0’, ‘விஸ்வாசம்’ டிக்கெட் கட்டணம்: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

 

‘2.0’, ‘விஸ்வாசம்’ டிக்கெட் கட்டணம்: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

‘2.0’, ‘விஸ்வாசம்’ திரைப்படங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ‘2.0’, ‘விஸ்வாசம்’ திரைப்படங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்தது. ஆனால், அரசின் ஆணையை எந்த திரையரங்குகளும் பின்பற்றவில்லை. இது தொடர்பாக சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’, ‘பேட்ட’ ஆகிய படங்களும், அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’ திரைப்படமு வெளியாக உள்ளன. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவும், கூடுதல் காட்சிகளை திரையிடவும் வாய்ப்புள்ளது. ஆகவே, இதில் நீதிமன்றம் தலையிட்டு அரசு உத்தரவை பின்பற்றாத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, கடந்த ஓராண்டுக்கு முன் பிறப்பித்த அரசாணையை ஏன் அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை, திரையரங்குகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவின் தற்போதைய நடவடிக்கை என்ன என்பது குறித்து டிசம்பர் 19ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.