‘2.0’ மிக்சிங்கில் திளைத்த ஏ.ஆர்.ரகுமான்!

 

‘2.0’ மிக்சிங்கில் திளைத்த ஏ.ஆர்.ரகுமான்!

‘2.0’ திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான ட்வீட்டை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

சென்னை: ‘2.0’ திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான ட்வீட்டை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் நவ.29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமான ‘2.0’ படத்தில் வெறும் 4 பாடல்களே இடம்பெற்றுள்ள நிலையில், பின்னணி ஸ்கோரில் கூடுதல் உழைப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘2.0’ படத்தின் மிக்சிங் குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்,‘6வது ரீல் மிக்சிங்.. 2.0 ஓ மை காட்..! உணர்ச்சி மற்றும் அறிவியல் கலந்த காவியம்’ என பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் ஒரு படத்தை இந்த அளவிற்கு புகழந்தது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.