2 வயது குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை: அதிர வைக்கும் வாக்குமூலம்!

 

2 வயது குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை: அதிர வைக்கும் வாக்குமூலம்!

அவரது மனைவி குழந்தை குறித்து விசாரிக்க,  போர்லா ஆற்றில் மகளை விட்டதாகத் தெரிவித்துள்ளார்.  

அசாம்: 2 வயது குழந்தையை ஆற்றில் தள்ளி  தந்தையே கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ. இவருக்கு ஜூனு என்ற மனைவியும் , ரிஷகா என்ற 2 வயது மகளும் உள்ளனர். கடந்த  கடந்த 28ஆம் தேதி பீர்பால் மகளை அழைத்து கொண்டு வெளியில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாமல் தனியாக வந்துள்ளார். இதை கண்ட அவரது மனைவி குழந்தை குறித்து விசாரிக்க,  போர்லா ஆற்றில் மகளை விட்டதாகத் தெரிவித்துள்ளார்.  

river

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உறவினர்களின் உதவியுடன் ஆற்றில் தேடியுள்ளார்.ஆனாலும் குழந்தை கிடைக்காததால் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மாற்று போலீசார் உதவியுடன் குழந்தை ரிஷிகா சடலமாக மீட்கப்பட்டார். 

இதையடுத்து பீர்பாலை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய  விசாரணையில், கடவுள் என் கனவில் வந்து இப்படி செய்யச் சொன்னார். அதனால் மகளை ஆற்றில் வீசினேன் என்றுகூறியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவரின் மனைவி, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் . அதனால் பில்லி சூனியத்தை நம்பி மந்திரவாதி ஒருவருடன் பழக்கம் வைத்திருந்தார். அவரின் தூண்டுதலின் பேரில் கூட இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் போலீசார் தொடர்ந்து பீர்பாலிடம் விசாரித்து வருகின்றனர்.