2-வது மனைவியை கத்தியால் குத்திய முதல் மனைவி: பரபரப்பு சம்பவம்!

 

2-வது மனைவியை கத்தியால் குத்திய முதல் மனைவி: பரபரப்பு சம்பவம்!

குடும்ப சண்டையில் கணவரின் இரண்டாவது மனைவியை முதல் மனைவி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம் : குடும்ப சண்டையில் கணவரின் இரண்டாவது மனைவியை முதல் மனைவி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் முகமது ரஷீத். அப்பகுதியில் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். முகமது ரஷீத்தின் முதல் மனைவி  சுராகாத்தூன். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்குத் திருமணம்  நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்  உள்ளனர்.
இதையடுத்து  ஜூரானா பேகம் என்ற பெண்ணை இரண்டாவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் முகமது ரஷீத் திருமணம் செய்தார். தனித்தனியே வசித்து வந்த இவர்கள் சமீபகாலமாக ஒரே  வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிகிறது. 

arrest

இந்நிலையில் முகமது ரஷீத்தின் இரு மனைவிகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு  சுராகாத்தூன் – ஜூரானா பேகம் இடையே சண்டை ஏற்பட அது கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த  முதல் மனைவி சுராகாத்தூன், திடீரென்று காய்கறி நறுக்கும் கத்தியைக் கொண்டு ஜூரானா பேகத்தை தாக்கியுள்ளார். இதில் ஜூரானா பேகத்திற்கு முகத்தின் கீழ் தாடையிலும் கழுத்திலும் வெட்டு விழுந்ததுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த  போலீசார்,  சுராகத்தூனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.