+2 மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்! பெற்றோரிடம்  சிக்கிக் கொண்ட ஆசிரியர்!

 

+2 மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்! பெற்றோரிடம்  சிக்கிக் கொண்ட ஆசிரியர்!

‘பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் எங்கேயும் அனுப்புவதற்கே பயமாய் இருக்கிறது’ என்று வயது வந்த பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பல பெற்றோர்கள் புலம்புவதைக் கேட்டிருப்போம். வீட்டிற்குள்ளேயே பெண் பிள்ளைகளை வைத்திருந்தாலும் தேடி வந்து செக்ஸ் தொல்லைக் கொடுத்தவரைப் பற்றிய செய்தி இது. இப்படி வீடு தேடி வந்த தொல்லைக் கொடுத்தது கூடப் படிக்கும் மாணவியோ, பக்கத்து வீடு, எதிர் வீடு என்று பழகிய நபரோ எல்லாம் கிடையாது.

‘பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் எங்கேயும் அனுப்புவதற்கே பயமாய் இருக்கிறது’ என்று வயது வந்த பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பல பெற்றோர்கள் புலம்புவதைக் கேட்டிருப்போம். வீட்டிற்குள்ளேயே பெண் பிள்ளைகளை வைத்திருந்தாலும் தேடி வந்து செக்ஸ் தொல்லைக் கொடுத்தவரைப் பற்றிய செய்தி இது. இப்படி வீடு தேடி வந்த தொல்லைக் கொடுத்தது கூடப் படிக்கும் மாணவியோ, பக்கத்து வீடு, எதிர் வீடு என்று பழகிய நபரோ எல்லாம் கிடையாது. பள்ளியின் ஆசிரியர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் துணிச்சலாக மாடியேறி வந்து மாணவியை மிரட்டிய சம்பவம் ஆவடியையே ஆட வைத்துள்ளது.

rajesh

சென்னை ஆவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் அந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. தீபாவளி பண்டிகையொட்டி விடுமுறை தினமானதால் அவர்களது வீட்டில் அனைவரும் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தனர். இந்நிலையில் தனது செல்போனில் அழைப்பு வந்ததல், செல்போனை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றுள்ளார் மாணவி. மகள் போனை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்று நீண்ட நேரமாகியும் கீழிறங்கி வராததால் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக மாடியேறிச் சென்றுள்ளனர் பெற்றோர்கள். மாடிக்குச் சென்றதும் மகளுடன் நின்றுக்  கொண்டு இன்னொருவர் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 
வீட்டில் யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீட்டு மாடியிலிருந்து குதித்து வந்து, மகளுடன் பேசிக் கொண்டிருந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர் பெற்றோ. விசாரணையில், மகள் படித்து வரும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ராஜேஷ் என்பவர் தான் பிடிபட்டவர் எனத் தெரிந்தது. அதன்பின், பிடிபட்டவரை மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், ஆசிரியருக்கும் அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதையடுத்து, காதலிக்கச் சொல்லி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார் ராஜேஷ். 
இந்த தீபாவளியன்று நேரில் வந்து வாழ்த்துச் சொல்வேன். என்னை காதலிக்க வேண்டும் என்று சொல்லியபடியே யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள்ளும் வந்து மிரட்டியிருக்கிறார் ஆசிரியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது