2 பெண்கள் தரிசனம் செய்தது உண்மைதான்: பினராயி விஜயன்

 

2 பெண்கள் தரிசனம் செய்தது உண்மைதான்: பினராயி விஜயன்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 பெண்கள் தரிசனம் செய்தது உண்மைதான் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 பெண்கள் தரிசனம் செய்தது உண்மைதான் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அங்கு செல்ல பெண்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக இந்து அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வரலாற்றில் இடம்பிடித்தனர். இதனையடுத்து ஒரு மணி நேர பரிகார பூஜைக்காக சபரிமலை கோயில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரள அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி இன்று சபரிமலை சென்ற 2 பெண்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் சன்னிதானம் சென்றது உண்மைதான் என்றார்.