2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு பணி இல்லை: அரசு அதிரடி அறிவிப்பு
Oct 22, 2019, 21:01 IST1571758308000
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் முயற்சியாக அசாம் மாநில அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அசாம் அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு பணி வழங்கப்பட மாட்டாது என்ற தீர்மானத்தை அம்மாநில சட்ட சபையில் நிறைவேற்றியது. இந்நிலையில் நேற்று நடந்த அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதம் அளிக்கப்பட்டது. அதன்படி இந்த மசோதா வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்குவரவுள்ளது. இச்சட்டத்தின் படி அரசு வழங்கும் இலவச நிலத்தை 15 ஆண்டுக்கு விற்பனை செய்ய முடியாது.
ஆனால் குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக மூன்று குழந்தைகளைப் பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலமொன்றை வழங்க இத்தாலி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.