2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் நடவடிக்கை! ஆர்.எஸ்.எஸ் தலைவர் அறிவிப்பு!! 

 

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் நடவடிக்கை! ஆர்.எஸ்.எஸ் தலைவர் அறிவிப்பு!! 

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அதனை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அதனை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தொண்டர்கள் பங்கேற்ற கூட்டம்  உத்தரபிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத்,  “நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் அவசியம். மக்கள் தொகை பெருக்கம்  கவலை அளிக்கிறது.

Mohan Bhagwat

2 குழந்தைகள் திட்டத்தையே நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அதனை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.  இனி வரும் நாட்களில் இந்த விவகாரத்தை ஆர்எஸ்எஸ் கையில் எடுக்கும். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. நாங்கள் நாட்டில் வாழும் 130 கோடி மக்களுக்காக உழைக்கிறோம். ” என கூறியுள்ளார்.