2 ஆம் வகுப்பு மாணவனை மனிதக்கழிவு அள்ள வைத்த ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை !

 

2 ஆம் வகுப்பு மாணவனை மனிதக்கழிவு அள்ள வைத்த ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை !

தனது வகுப்பறையில் பயின்ற 2 ஆம் வகுப்பு மாணவனை மற்றொரு மாணவனின் கழிவை அள்ளும் படி கூறியுள்ளார்.

நாமக்கல் நகராட்சி பள்ளியில் பணியாற்றி வருபவர் ஆசிரியை விஜயலட்சுமி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, தனது வகுப்பறையில் பயின்ற 2 ஆம் வகுப்பு மாணவனை மற்றொரு மாணவனின் கழிவை அள்ளும் படி கூறியுள்ளார். அதன் படி, அந்த சிறுவனும் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுவன், அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார். 

ttn

இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆசிரியை விஜயலட்சுமியைக் கைது செய்துள்ளனர். அவர் மீது,  எஸ்.சி. – எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுப் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக  நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று ஆசிரியை விஜயலட்சுமிக்கு ரூ.1000 அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.