2 ஆண்டுகளாக இளம்பெண்ணுக்கு வன்புணர்வு சித்ரவதை அளித்த தொழிலதிபர் கைது

 

2 ஆண்டுகளாக இளம்பெண்ணுக்கு வன்புணர்வு சித்ரவதை அளித்த தொழிலதிபர் கைது

வீடியோ எடுத்தது பற்றி அறிந்த அப்பெண்மணி, அதுகுறித்து கேட்டதற்கு அலட்சியமாக இருந்திருக்கிறான். அவனது குணத்தை அறிந்து விலக முயற்சித்தபோது, வீடியோவை அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என மிரட்டியிருக்கிறான்.

மும்பை: இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் அளித்ததன் பேரில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமித் அகர்வால் என்பவன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்புணர்வு சித்ரவதை அளித்துள்ளான். ஒரு விழாவில் அமித்தை சந்தித்த அந்த பெண், அவன் மீது காதல் கொண்டிருக்கிறார். பின்னர் இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். அப்படி ஒரே வீட்டில் வாழ்ந்தபோது மதுவில் மாத்திரை கலந்து குடிக்க வைத்து வன்புணர்வு செய்துள்ளான். அதனை வீடியோ எடுத்து வைத்திருக்கிறான்.

r

வீடியோ எடுத்தது பற்றி அறிந்த அப்பெண்மணி, அதுகுறித்து கேட்டதற்கு அலட்சியமாக இருந்திருக்கிறான். அவனது குணத்தை அறிந்து விலக முயற்சித்தபோது, வீடியோவை அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என மிரட்டியிருக்கிறான். அதற்கு பயந்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவனது ஆசைக்கு இணங்கியிருக்கிறார் அந்த பெண்மணி. இந்நிலையில் அந்த வீடியோவை அவன் வேறு நபருக்கு அனுப்பிய உண்மை தெரியவந்துள்ளது. 

S

அதனை தொடர்ந்து ஓஷிவாரா காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அமித் அகர்வாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்க: என்னுடன் நடித்தால் மரணமா? சென்டிமென்டில் தாக்கிய பிரியா ஆனந்த்! ஜகா வாங்கிய நெட்டிசன்!