2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விரைவில் சிறை செல்வார்கள்: சுப்ரமணியன் சுவாமி

 

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விரைவில் சிறை செல்வார்கள்: சுப்ரமணியன் சுவாமி

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விரைவில் சிறை செல்வார்கள் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் சுவாமி, “நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தை பற்றி எதுவும் தெரியாது எனவும், அவரால் தற்போது நிலவி வரும் தேக்கநிலையை சரிசெய்ய முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அதிக ஊழல்தான் பொருளாதார மந்தநிலைக்கு காரணம்.

Subramanian Swamy

விவசாயிகள் தங்களின் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனை உருவாக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களான ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் சிறைக்கு செல்வார்கள் என்பதால் செயற்குழு கூட்டத்தை திகார் சிறையில் வைத்துக்கொள்ளலாம். ப.சிதம்பரம் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் சிறை செல்வது நிச்சயம். 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விரைவில் சிறை செல்வார்கள்” எனக் கூறினார்.