ஜனவரி19ல் நேரில் ஆஜராக ரஜினிக்கு சம்மன்

 

ஜனவரி19ல் நேரில் ஆஜராக ரஜினிக்கு சம்மன்

தூத்தூக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பி இருக்கிறது.

ஜனவரி19ல் நேரில் ஆஜராக ரஜினிக்கு சம்மன்

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்த ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக கூறியிருந்தார். இதனால், போராடுகிறவர்கள் சமூக விரோதிகளா என்ற சர்ச்சை எழுந்தது.
துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம், ரஜினியின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க சம்மன் அனுப்ப்பியது. ஆனால், ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காத நிலையில், வரும் ஜனவரி19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.