ஜெ., இருக்கும்போது இருந்த பயத்தை விடவும் இப்போதான் அதிகமாக இருக்குது… திண்டுக்கல் சீனிவாசன்

 

ஜெ., இருக்கும்போது இருந்த பயத்தை விடவும் இப்போதான் அதிகமாக இருக்குது… திண்டுக்கல் சீனிவாசன்

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பதால், இப்ப இருக்குற ஆட்சியில் மன்னிப்பு கிடையாது. தண்டனை மட்டும்தான் என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் மண்டலத்தின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தின் கட்டிடன் திறப்பு விழாஇன்று நடைபெற்றது.

ஜெ., இருக்கும்போது இருந்த பயத்தை விடவும் இப்போதான் அதிகமாக இருக்குது… திண்டுக்கல் சீனிவாசன்

இந்த விழாவில், இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

அப்போது அமைச்சர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அறநிலையத்துறை க்கு சொந்தாமன இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்த கேள்விக்கு, ஐந்து ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம்ஜ் ஹெக்டே கோயில் நிலங்களை தனியாரிடமிருந்து மீட்டிருக்கிறது இந்த அரசு என்றார்.

ஜெ., இருக்கும்போது இருந்த பயத்தை விடவும் இப்போதான் அதிகமாக இருக்குது… திண்டுக்கல் சீனிவாசன்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ, ’’அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் மட்டும்மல்ல…. வனத்துறைக்கு சொந்தாமன இடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. பல ஆயிரம் கோடி நிலங்கள் வனத்துறை மூலமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

மேலும், ’’ஜெயலலிதா இருக்கும்போது இருந்த பயத்தை விடவும் இப்போதுதான் அதிகமாக இருக்கிறது. ஜெயலலிதா இருக்கும்போது கூட மன்னிப்பு கிடைக்கும். ஆனா, இப்ப இருக்குற ஆட்சியில் மன்னிப்பு கிடையாது. தண்டனை மட்டும்தான்’’ என்றார்.

’’பொள்ளாட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களையே கைது செய்திருக்கிறோம். அப்படி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்றார்.