கோட்சே பெயரில் நூலகம்… காந்தியை கொல்ல திட்டம் தீட்டியது பற்றிய நூல்கள்..

 

கோட்சே பெயரில் நூலகம்… காந்தியை கொல்ல திட்டம் தீட்டியது பற்றிய நூல்கள்..

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் பெயரில் நூலகம் திறந்துவைத்திருக்கிறது விஸ்வ இந்தி திவாஸின் அகில பாரதிய இந்து மகாசபை.

கோட்சே பெயரில் நூலகம்… காந்தியை கொல்ல திட்டம் தீட்டியது பற்றிய நூல்கள்..

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இந்த நூலகம் நேற்று தொடங்கப்பட்டிருக்கிறது. நாட்டு பிரிவினையை நாதுராம் கோட்சே ஏன் எதிர்த்தார் என்று இக்கால தலைமுறையினருக்கும், இனி வரும் சந்ததியினருக்கும் தெரியப்படுத்தும் விதமாக இந்த நூலகத்தினை திறந்து வைத்திருப்பதாக அகில பாரதிய இந்து மகாசபையின் துணைத்தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் தெரிவித்திருக்கிறார்.

கோட்சே பெயரில் நூலகம்… காந்தியை கொல்ல திட்டம் தீட்டியது பற்றிய நூல்கள்..

கோட்சே பற்றிய நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன. மகாத்மா காந்தியின்படுகொலைக்கு கோட்சே எவ்வாறு திட்டம் தீட்டினார் என்பன பற்றிய புத்தகங்கள் எல்லாம் இங்கு உள்ளன. நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

குவாலியரில் கோட்சேவுக்கு கோயில் கட்டப்பட்டது. காங்கிரசாரின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது அகற்றப்பட்டது. இந்நிலையில் கோட்சே பெயரில் நூலகம் அமைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.