முதல்வருக்கு சவால் விடுவதிலும் திமுக வெறும் வாய்ச்சவடால்தான் காட்டுகிறது… அண்ணாமலை

 

முதல்வருக்கு சவால் விடுவதிலும் திமுக வெறும் வாய்ச்சவடால்தான் காட்டுகிறது… அண்ணாமலை

அதிமுக மீது திமுக தலைவர் ஸ்டாலினும், ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு கூறிவருவதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்து பிரச்சாரம் செய்தார்.

இதனால், ஆ. ராசா முதலில் முதல்வரை நேருக்கு விவாதம் செய்ய தயாரா என்று சொடக்கு போட்டு முதல்வருக்கு சவால் விடுத்தார்.

முதல்வருக்கு சவால் விடுவதிலும் திமுக வெறும் வாய்ச்சவடால்தான் காட்டுகிறது… அண்ணாமலை

‘’ஆ. ராசா எல்லாம் ஒரு ஆளா.. அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..’’என்று முதல்வர் ராசாவின் சவாலை தூசி தட்டுவதுமாதிரி தட்டிவிட்டார். அதன்பின்னர், நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா என்று ஸ்டாலின் சவால் விட்டு வருகிறார்.

இதுகுறித்து தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

முதல்வருக்கு சவால் விடுவதிலும் திமுக வெறும் வாய்ச்சவடால்தான் காட்டுகிறது… அண்ணாமலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் பாஜக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலையிடம் இந்த கேள்வியை எழுப்பியபோது, ‘’மத்திய அரசின் கொள்கை மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க பாஜகவின் மூத்த நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் இதுவரைக்கும் அவர் விவாதத்திற்கு வரவில்லை. இதிலிருந்தே தெரிகிறது திமுக வெறும் வாய்ச்சவடால்தான்.

முதல்வருக்கு சவால் விடுவதிலும் திமுக வெறும் வாய்ச்சவடால்தான் காட்டுகிறது’’ என்றார்.

முதல்வருக்கு சவால் விடுவதிலும் திமுக வெறும் வாய்ச்சவடால்தான் காட்டுகிறது… அண்ணாமலை

அதிமுக – பாஜக கூட்டணி குழப்பம் குறித்தான கேள்விக்கு, ‘’அதிமுகவுடனான பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. முதல்வரும், துணை முதல்வரும் எங்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள்.’’என்றார்.