புதுவை முதல்வரின் போராட்டம்… திருமாவளவன் ஆதரவு

 

புதுவை முதல்வரின்  போராட்டம்… திருமாவளவன் ஆதரவு

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி, காங்கிரஸ், விசிக மற்றும் தோழமை கட்சிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதை முன்னிட்டு முதல்வர் வெ.நாராயணசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து போராட்டம் வெற்றிபெற வாழ்த்தினார்.

புதுவை முதல்வரின்  போராட்டம்… திருமாவளவன் ஆதரவு

புதுச்சேரிஅரசில் அம்மாநில ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு அதிகமாக இருக்கிறது. அதானல் அரசு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை என்று அம்மாநில முதல்வர் நாராயணமாமியும், கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். பல்வேறு வகையிலும் போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும், இந்த பிரச்சனையும் ஓய்வதாக தெரியவில்லை.

கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் கிரண்பேடிக்கு எதிராக சாலையில் படுத்து தூங்கி போராட்டம் நடத்தினார் முதல்வர் நாராயணசாமி. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் அவருடன்போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

புதுவை முதல்வரின்  போராட்டம்… திருமாவளவன் ஆதரவு

இந்நிலையில், தற்போதும் ‘திரும்பிப்போ கிரண்பேடியே’ என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையில் அமர்ந்து சாப்பிட்டு அங்கேயே தூங்கும் போராட்டத்தினை நடத்தி வருகிறார்கள். முதல்வர் நாராயணசாமியுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சாலையில் தார்பாய் விரித்து அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து போராட்டம் வெற்றிபெற வாழ்த்தினார்.