ரஜினியை அழைக்கும் அஜித், விஜய் ரசிகர்கள்

 

ரஜினியை அழைக்கும்  அஜித், விஜய் ரசிகர்கள்

இப்போ இல்லேன்னா எப்பவுமே இல்லை என்று ரசிகர்களை உசுப்பேத்திவிட்டு கட்சி அறிவிக்கும் நாளில் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்துவிட்டார் ரஜினி. ஆனால், ரசிகர்களால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. இந்த தேர்தலில் போட்டியிடபோகிறோம் என்று இருந்தவர்கள் எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

ரஜினியை அழைக்கும்  அஜித், விஜய் ரசிகர்கள்

ஒருவழியாக ரசிகர் மன்றத்தினர் ஒன்று சேர்ந்து இன்றைக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘வா தலைவா வா’ என்று ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போராட்டத்தினை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த போராட்டத்திற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பேருந்துகளிலும், ரயில்களிலும் சென்னைக்கு திரண்டுவந்தனர்.

ரஜினியை அழைக்கும்  அஜித், விஜய் ரசிகர்கள்

வெறும் போராட்டம் மட்டும் என்றில்லாமல் கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் எல்லாம் நடத்தியது கவனிக்கவைத்தது.

ரஜினி ரசிகர்களின் இந்த போராட்டத்தில் அஜித், விஜய் ரசிகர்களும் ரஜினியை அரசியலுக்கு அழிப்பதாக பேனர்கள் தென்பட்டன.

ரஜினியை அழைக்கும்  அஜித், விஜய் ரசிகர்கள்

போராட்டத்தினை முன்னிட்டு #அரசியலுக்குவாங்கரஜினி என்ற ஹேஷ்டேக்கினையும் ரஜினி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.