1990 முதல் தயாரான 106 தூண்கள்: அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் அமைப்பு இதுதான்!

 

1990 முதல் தயாரான  106 தூண்கள்: அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் அமைப்பு இதுதான்!

இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி  வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

ram

அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும்  2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கை   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்டமாகக்  கடந்த  9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அயோத்தி இடம் இந்துக்களே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது.  மேலும் சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் கோவில் கட்டுவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று  கூறியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

ram

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பையடுத்து கோயில் கட்டும்  பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அமைத்து கொடுத்துள்ள கட்டமைப்பை வைத்தே இந்த கோயில்  உருவாகவுள்ளதாகவும், கோயிலின் உயரம் 128 அடி, அகலம் 140 அடியாகும் என்றும் மொத்தம் 212 கல் தூண்கள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது  இதில் 106 தூண்கள் தயாராகியுள்ளது என்று சொல்லப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி  வரும் ஏப்ரல் மாதம் ராமநவமி முதல் துவங்க உள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

ram

இதுகுறித்து கூறும் ராமர் கோயில் கண்காணிப்பாளர் ஒருவர், ‘கோயில் முழுமையாகத் தயாராக 5 ஆண்டுகள் ஆகும். கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்தே, கோயிலுக்கு தேவையான தூண்கள், உத்தரம் உருவாக்கப்பட்டு விட்டது. தற்போது வரை 60 சதவீதம் பணிகள் நடந்து முடிந்துள்ளது.  நீதிமன்ற தீர்ப்பால் இன்னும் பணிகள் வேகமெடுத்துள்ளது’ என்று கூறியுள்ளார்.