ரஜினி ரசிகர்கள் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி

 

ரஜினி ரசிகர்கள் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி

உடல்நிலையை காரணம் காட்டி மிக எளிதாக தான் கட்சி தொடங்க வில்லை என்று ரஜினி எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி கட்சி தொடங்குவார் என்று சொல்லிக்கொண்டிருந்த ரசிகர்கள் அத்தனை சீக்கிரத்தில் தனது வட்டத்தில் இருந்து எஸ்கேப் ஆக முடியுமா?

ரஜினி ரசிகர்கள் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி

படாத பாடுபட்டு பூத் கமிட்டிகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களை நடு ஆற்றில் தவிக்க விட்ட ரஜினிகாந்தை மீண்டும் யோசித்து முடிவெடுக்கும்படி சொல்லி நாளை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அறப்போராட்டம் நடத்துகிறார்கள். இதற்காக போலீஸ் அனுமதியும் வழங்கி இருக்கிறது.

மாவட்ட நிர்வாகிகள்தான் இந்த அறப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சிஅடைந்த மன்றத்தின் தலைமை, இது தலைமை ஒப்புதல் இல்லாமல் நடைபெறுகிறது. தலைவரின் மனதை கஷ்டப்படுத்த வேண்டாம். அவரிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும் பொறுமை காக்க வேண்டும் என்று ரஜினி மன்றத்தின் தலைமை வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆனால், அதை கேட்காமல், ரஜினி தனது அறிவிப்பை திரும்ப பெற்று கட்சியை தொடங்க வேண்டும் என்று நாளைஅறப்போராட்டம் நடத்துவதில் தீவிரமாக இருக்கின்றனர் ரசிகர்கள்.

அறப்போராட்டட்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.