குஷ்பு எதிர்த்து போட்டியிட்டாலும் ஸ்டாலின் தான் அமோக வெற்றி பெறுவார்… கார்த்தி சிதம்பரம்

 

குஷ்பு எதிர்த்து  போட்டியிட்டாலும் ஸ்டாலின் தான் அமோக வெற்றி பெறுவார்… கார்த்தி சிதம்பரம்

நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்சி தாவும் குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிட ஜனநாயக உரிமை இருக்கிறது என்று சொன்ன கார்த்தி சிதம்பரம் எம்.பி., குஷ்பு எதிர்த்து போட்டியிட்டாலும் ஸ்டாலின் தான் அமோக வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது கார்த்திக் சிதம்பரம் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

குஷ்பு எதிர்த்து  போட்டியிட்டாலும் ஸ்டாலின் தான் அமோக வெற்றி பெறுவார்… கார்த்தி சிதம்பரம்

முன்னதாக புதுக்கோட்டையில் திலகர் திடலில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடிகை குஷ்பு பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது என்று சொன்ன குஷ்பு, எதிர்கட்சிகள் பெண்களின் பாதுகாப்பு பற்றியோ ஊழல் பற்றியோ பேச அருகதையில்லை. திமுகவில் நான் இருந்தபோது எனது வீட்டில் கல் எறிந்தது குறித்து பேச முயன்றபோது கண்டுகொள்ளாத ஸ்டாலின் தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார் .பெண்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்புகள் தரப்படும் என மோடி அறிவித்துள்ளார் என்றார்.

குஷ்பு எதிர்த்து  போட்டியிட்டாலும் ஸ்டாலின் தான் அமோக வெற்றி பெறுவார்… கார்த்தி சிதம்பரம்

பின்னர் அவர், பாஜக தமிழகத்தில் வளர்ந்துவருகிறது, ஒவ்வொரு தெருக்களிலும் பாஜக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றவர், நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும், ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார் என்றார் தடாலடியாக.

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று இன்று புதுக்கோட்டையில் மட்டுமல்ல, தொடர்ந்து பேசி வருகிறார் குஷ்பு. இந்நிலையில் இன்று புதுக்கோட்டையிலும் அதையே தெரிவித்து குஷ்புவுக்கு திமுக சார்பில் பதிலடி கொடுத்திருக்கிறார்.