அழகி்ரிக்கு ஆதரவு தெரிவித்த மூன்று திமுக எம்.எல்.ஏக்கள்! ரகசிய ஆலோசனையால் அதிர்ந்த ஸ்டாலின்

 

அழகி்ரிக்கு ஆதரவு தெரிவித்த மூன்று திமுக எம்.எல்.ஏக்கள்! ரகசிய ஆலோசனையால் அதிர்ந்த ஸ்டாலின்

பொறுத்தது போதும் என்றுதான் கடந்த மூன்றாம் தேதி அன்று மதுரையில் பொங்கி எழுந்தார் மு.க.அழகிரி. ஸ்டாலின் தனக்கு இனிமேலும் கட்சி்யில் உரிய மரியாதை கொடுக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்டதால், அந்த ஆதரவாளர்கள் கூட்டத்தினை கூட்டினார்.

அழகி்ரிக்கு ஆதரவு தெரிவித்த மூன்று திமுக எம்.எல்.ஏக்கள்! ரகசிய ஆலோசனையால் அதிர்ந்த ஸ்டாலின்

10 ஆண்டுகளுக்கு பின்னர் அழகிரி தலை காட்டுவதால் கூட்டம் கூடாது என்று பலரும் சொல்லி வந்த வேளையில், மதுரையில் திரண்ட ஆதரவாளர்களால் திமுக மட்டுமல்லாது மற்ற கட்சிகளும் கூட அதிர்ந்தது.

எங்கே காசு கொடுத்து, குவார்ட்டர், பிரியாணி கொடுத்து கூட்டத்தை கூட்டியதாக சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து, அதற்கும் முந்திக்கொண்டார்.

இத்தனை பேர் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கிறீர்களே.. உங்களுக்கு எல்லாம் காசு கொடுத்தேனா? குவார்ட்டர் கொடுத்தேனா? பிரியாணி கொடுத்தேனா? என்று அவர்களிடம் கேட்க, இல்லை என்று ஆரவாரித்தார்கள்.

அழகி்ரிக்கு ஆதரவு தெரிவித்த மூன்று திமுக எம்.எல்.ஏக்கள்! ரகசிய ஆலோசனையால் அதிர்ந்த ஸ்டாலின்

என் மேல் உள்ள நம்பிக்கையில் வந்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையினை நான் காப்பாற்றுவேன் என்றார்.

அழகி்ரிக்கு ஆதரவு தெரிவித்த மூன்று திமுக எம்.எல்.ஏக்கள்! ரகசிய ஆலோசனையால் அதிர்ந்த ஸ்டாலின்

தனக்கு சிலர் ஆதரவு தெரிவிக்காததை பார்த்தும் வெகுண்டெழுந்த அழகிரி, எத்தனையோ பேரை நான் மந்திரியாக்கி இருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது என்றூ கூறினார். இதனால்தானோ என்னவோ தெரியவில்லை. தென் மாவட்டத்தை சேர்ந்த மூன்று திமுக எம்.எல்.ஏக்கள் அழகிரியை ரகசியமாக சந்தித்து, எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று சொல்லி விட்டு போயிருப்பதாக தகவல்.

வழக்கமாக கொடி கட்டிய தங்களது காரில் செல்லும் அந்த மூன்று பேரும் வேறு காரில் வந்து சென்றிருக்கிறார்கள். ஒரு பெண் எம்.எல்.ஏ. உட்பட மூன்று எம்.எல்.ஏக்களுடன் சில மா.செ., ஒ.செ.,க்களும் வந்து அழரியை சந்தித்துவிட்டு போயிருப்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறது ஸ்டாலின் தரப்பு.