நன்றி முதல்வரே… சென்னை எங்கிலும் பரபரப்பு போஸ்டர்

 

நன்றி முதல்வரே… சென்னை எங்கிலும் பரபரப்பு போஸ்டர்

பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்கள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கலாமா? தியேட்டர்கள் விவகாரத்தில் குழந்தை போல அரசு மெல்ல மெல்ல எழுந்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்வரைக்கும் அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

நன்றி முதல்வரே… சென்னை எங்கிலும் பரபரப்பு போஸ்டர்

தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகள் அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென்று மத்திய அரசும் உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தமிழக அரசு தனது அறிவிப்பிலிருந்து பின்வாங்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 100சதவிகிதத்திற்கு அனுமதி கொடுத்தால்தான் தங்களின் நிலைமை சரியாகும் என்று தொடர்ந்து தியேட்டர் அதிபர்களும், திரையுலகினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நடிகர் விஜய் முதல்வரை சந்தித்து தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி கோரினார்.

இதன் பின்னர் முதல்வர் அறிவித்த தளர்வுகளில் , தியேட்டர்களில் 100சதவிகிதத்திற்கு அனுமதி வழங்கினார்.

இதனால் விஜய் ரசிகர்கள் ‘நன்றி முதல்வரே..’ என்று சென்னை மாநகரெங்கிலும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். ஆனால்,தற்போது மத்திய அரசும், நீதிமன்றமும் தடை விதித்திருப்பதால், சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.