சுப்பிரமணியபுரம் பட பாணியில் இளைஞர் வெட்டிக்கொலை: காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்

 

சுப்பிரமணியபுரம் பட பாணியில்  இளைஞர் வெட்டிக்கொலை: காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்

காதலியை விட்டே காதலனை தனியாக வரச்சொல்லி அப்பெண்ணின் உறவினர்கள் காதலனை வெட்டிக்கொல்லும் சுப்பிரமணியபுரம் படத்தின் காட்சிகளை போலவே நிஜத்திலும் ஒரு கொடூர சம்பவம் அரங்கே இருக்கிறது.

சுப்பிரமணியபுரம் பட பாணியில்  இளைஞர் வெட்டிக்கொலை: காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த 23 வயது இளைஞரை நடுரோட்டில் வெட்டிகொலை செய்துள்ளனர். பட்டப்பகலில் துடிதுடிக்க அந்த இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காதலியின் அழைப்பின் பேரில், அவரை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி சென்றிருக்கிறார் அந்த இளைஞர். அப்போது கடைத்தெருவில் அந்த இளைஞரை காதலியின் உறவினர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

அந்த இளைஞரை திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக பெண்ணின் உறவினர்கள் இந்த செயலை செய்துள்ளனர். இது சாதி ஆணவக்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.