முக்கியமில்லாத பதவி.. விடைபெற்றார் சகாயம் ஐஏஎஸ்
Jan 6, 2021, 15:47 IST1609928275000
அரசுப்பணியில் இருந்து சகாயம் ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டார்.
57 வயதாகும் சகாயம் ஐஏஎஸ், ஓய்வு பெற இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் அவர் இன்று விருப்ப ஓய்வில் செல்கிறார்.
விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கடந்த அக்டோபர் 2ம் தேதி அன்று கடிதம் எழுதி இருந்தார் சகாயம். பரிசீலனைக்கு பின்னர் இன்று அவருக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை ஆட்சியராக இருந்தபோது, துணிச்சலுடன் கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் சகாயம். கடந்த 7 வருடங்களாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். முக்கியமில்லாத பதவி என்பதால் அவர் விருப்ப ஓய்வை எடுத்திருப்பதாக தகவல் கசிகிறது.
மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து பணியாற்றி வரும் சகாயம், அதை தொடர்வார் என்று தெரிகிறது.