அமைச்சர் சொன்ன ‘கடலை’ கதை… வைரலாகுது!

 

அமைச்சர் சொன்ன ‘கடலை’ கதை… வைரலாகுது!

’’அதிமுககாரன் பயந்து பயந்து ஒரு செயலை செய்வான். ஒரு கடலை காட்டுக்கு போனா ஒரு கடலை செடியை பிடுங்கி எடுத்து அதில் ரெண்டு கடலையை சாப்பிட்டுவிட்டு, உரிமையாளரிடம் போய், அண்ணே ரெண்டு கடலை சாப்பிட்டேன் என்று சொல்லிவிட்டு மிச்சத்தையும் கொடுத்துவிட்டு போய்விடுவோம்.

அமைச்சர் சொன்ன ‘கடலை’ கதை… வைரலாகுது!


ஆனா, திமுககாரன் என்ன செய்வான் தெரியுமா? கடலைசெடிக்கு 10 அடிக்கு முன்னாடி இருந்து மண்ணுக்கு அடியிலேயே கையை விட்டு போய் கடலையை மட்டும் பறிச்சுட்டு வந்துடுவான். கேட்டா, நான் பறிக்கலன்னு சொல்லிடுவான். வேணும்னா பாருங்க.. செடி அப்படியேதான இருக்குன்னு சொல்லுவான். ஆனா, கடலையை காணோங்கிறதுதான் உரிமையாளரோட கவலை. இதுதான் விஞ்ஞான ரீதியான ஊழல்.’’

கோவை தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி பேசியதற்கு அதே இடத்தில் நேற்று முன் தினம் பதிலடி கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் இந்த கடலை கதை பேச்சு வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.